| |
| சென்னையில் பன்றிக் காய்ச்சலுக்கு 3 பெண்கள் பலி |
-
| சென்னையில் கடந்த வாரத்தில் மட்டும் பன்றிக் காய்ச்சலுக்கு 3 பெண்கள் பலியாகி இருக்கிறார்கள். ரத்த மாதிரிகள் கிண்டி கிங்ஸ் இன்ஸ்டிடியூட்டில் பரிசோதித்ததில் பன்றி காய்ச்சல் தாக்கியிருப்பது உறுதியானது. |
| வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு நிலை |
-
| வட ஆந்திராவை ஒட்டியுள்ள வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகியுள்ளதால் தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் மழை பெய்ய வாய்ப்பு - சென்னை வானிலை மையம். |
| சென்னை வந்த இரயில் நடுவழியில் நிறுத்தம் |
-
| பெங்களூரில் இருந்து சென்னை வந்து கொண்டிருந்த லால்பாக் இரயில், மாட்டின் மீது மோதாமல் இருக்க பிரேக் போட்டதால் என்ஜினில் கோளாறு ஏற்பட்டு நடுவழியில் நிறுத்தப்பட்டது. |
| குறுகிய காலப் பயிரையே விவசாயிகள் பயிரிட வேண்டும் |
-
| மேட்டூர் அணையில் தண்ணீர் குறைவாக இருப்பதால் குறுகிய காலப் பயிரை மட்டுமே விவசாயிகள் பயிரிடுவதுடன், அதை குறிப்பிட்ட நாளில் அறுவடை செய்ய வேண்டும் என்று சேலம் ஆட்சியர் தெரிவித்தார். |
| காமன்வெல்த் போட்டி: பாட்மின்டன் - இந்திய வீரர்கள் அறிவிப்பு |
-
| தில்லியில் அக்டோபர் மாதம் நடைபெறவுள்ள காமன்வெல்த் விளையாட்டு, பாட்மின்டன் போட்டியில் இந்தியா சார்பில் சாய்னா நேஹ்வால், சேட்டன் ஆனந்த் உள்ளிட்ட முன்னணி நட்சத்திரங்கள் பங்கேற்கின்றனர். |
| காமன்வெல்த் போட்டியைக் கலக்க வருகிறது ஆப்பிரிக்காவின் வுவுஸேலா இசைக் கருவி |
-
| ஆப்பிரிக்காவின் நூதன இசை கருவியான வுவுஸேலா டெல்லி காமன்வெல்த் போட்டியின்போதும் ரசிகர்களால் இசைக்கப்படவுள்ளது. ஆப்பிரிக்காவின் மிக முக்கியமான இசைக் கருவி இது. |
| தியான்கி-1 : அதிவேக கம்ப்யூட்டர் |
-
| சீனாவின் தேசிய பாதுகாப்பு தொழில் நுட்ப பரிவு பல்கலை கழகம் ஒரு செகண்டில் ஆயிரம் டிரிலியன் செயல்களை செய்து முடிக்க கூடிய அதிவேக கம்ப்யூட்டரை கண்டுபிடித்துள்ளது. இது இம்மாதம் பயன்பாட்டிற்கு வரஉள்ளது. |
| மரங்களுக்கு ராக்கி கட்டி ஒரிசா பெண்கள் அசத்தல் |
-
| ஒரிசாவின் சம்பல்பூரில் உள்ள புத்தராஜா வனப்பகுதியில் மரங்களுக்கு நூற்றுக்கணக்கான பெண்கள் ராக்கி கயிறு கட்டி தங்களது சகோதர பாசத்தை வெளிப்படுத்தினர். |
| தமிழக மீனவர்கள் மீது ஒரே ஆண்டில் இலங்கை ராணுவம் 22 முறை தாக்குதல் |
-
| தமிழக மீனவர்கள் மீது இலங்கை ராணுவம் ஒரே ஆண்டில் மட்டும் 22 முறை தாக்குதல் நடத்தியுள்ளது என, ஈரோடு மக்களவை உறுப்பினர் அ.கணேசமூர்த்தி தெரிவித்துள்ளார். |
| ரசாயனம் பூசிய விநாயகர் சிலைகளை கரைக்க வேண்டாம் என எச்சரிக்கை |
-
| ரசாயன வர்ணம் பூசப்பட்ட விநாயகர் சிலைகளை நீர்நிலைகளில் கரைப்பதை தவிர்க்க வேண்டும் என, பொதுமக்களுக்கு திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் வேண்டுகோள் விடுத்துள்ளார். |
| தொட்டியில் சாமி உருவம் விருத்தாசலம் கோவிலில் பரபரப்பு |
-
| கடலூர் மாவட்டம், விருத்தாசலம் சாத்துக்கூடல் சாலையில் வரதராஜப் பெருமாள் கோவிலில் உள்ள தொட்டியில் நிரம்பியுள்ள தண்ணீரில் சாமியின் உருவங்கள் வரைபடம் போல் தெரிந்ததை, பக்தர்கள் ஆச்சரியத்துடன் பார்த்தனர். |
| வரும் 7ம் தேதி தனியார் பஸ்கள் ஓடாது : போக்குவரத்து தொழிலாளர் சங்கம் அறிவிப்பு |
-
| கடலூர் மாவட்டத்தில் வரும் 7ம் தேதி டீசல் விலை உயர்வு காரணமாகவும், அரசு, பஸ்கட்டண உயர்வு வழங்காததாலும் தனியார் பஸ்கள் ஓடாது என மாவட்ட பேருந்து போக்குவரத்து பொது தொழிலாளர் சங்கம் அறிவித்துள்ளது. |
| விழுப்புரத்தில் கிடைத்த கற்சிலையால் பரபரப்பு |
-
| விழுப்புரத்தில் பாதாள சாக்கடை திட்டப் பணிகளுக்காக தோண்டிய பள்ளத்தில் கிடைத்த சாமி சிலையால் பரபரப்பு ஏற்பட்டது. தகவலறிந்த தாசில்தார் சேதுராமன், சாமி சிலையை அலுவலகத்திற்கு கொண்டு வந்தார். |
| நாமக்கல் பள்ளியில் ஆசிரியர் தின விழா |
-
| ராசி நட்புறவு நலச்சங்கம் சார்பில், ஆசிரியர் தின விழா ராசிபுரம் தேசிய பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடந்தது. சங்கத்தலைவர் ராகவன் தலைமை வகித்தார். பள்ளி தலைமையாசிரியர் மாலதி வரவேற்றார். |
| 25 ஆண்டுகளுக்கு பின் பேருந்து வசதி |
-
| அன்னூர் பகுதியில் கதவுகரை உள்ளிட்ட ஐந்து கிராமங்களுக்கு பஸ் வசதி கோரி 25 ஆண்டுகளாக மக்கள் போராடி வந்தனர். இந்நிலையில் அரசு பஸ்கள் இக்கிராமங்களுக்கு இயங்க துவங்கின. |
| "நமது நலம் நமது கைகளிலே' திருப்பூரில் திட்டம் துவக்கம் |
-
| தேசிய ஊரக சுகாதார இயக்கம், பொது மருத்துவம் மற்றும் நோய் தடுப்பு மருந்து துறை இணைந்து கொசுக்களால் பரவும் நோய்களை தடுக்க, "நமது நலம் நமது கைகளிலே' என்ற திட்டத்தை துவக்கியுள்ளது. |
| தொடரும் நூல் விலையேற்றம் எதிரொலி : கரூர் மாவட்ட ஜவுளி உற்பத்தி கடும் பாதிப்பு |
-
| தொடரும் நூல் விலை ஏற்றத்தால், கரூர் மாவட்டத்தில் ஜவுளி உற்பத்தி மற்றும் ஏற்றுமதி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. கடந்த ஒரு வாரத்தில் 15 சதவீதம் வரை நூல் விலை உயர்ந்துள்ளதாக ஜவுளி உற்பத்தியாளர் கூறினர். |
-
| பல்லடம்: கேத்தனூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் இலக்கிய மன்ற துவக்கவிழா நடந்தது. தலைமை ஆசிரியர் கனகராஜ் தலைமை வகித்தார். ஆசிரியர் வெங்கடேசன் வரவேற்றார். |
| ராணுவமையத்தில் கண்காட்சி : வியந்துப் பார்த்த மாணவர்கள் |
-
| மாணவப்பருவத்தில் ராணுவத்தின் அருமை, பெருமைகளை தெரிந்து கொள்ள உதவும் வகையில், எம்.ஆர்.சி., ராணுவ மையத்தில் கண்காட்சி நடத்தப்பட்டது - துப்பாக்கி, ராக்கெட் லாஞ்சர்களை மாணவர்கள் நேரில் பார்த்து ஆச்சரியம். |
| வேறு நபர் பெயரிலுள்ள காஸை பயன்படுத்தினால் நடவடிக்கை : கரூர் டி.ஆர்.ஓ., எச்சரிக்கை |
-
| "வேறு நபரின் பெயரில் உள்ள காஸ் இணைப்பை பயன்படுத்தும் நபர் மீது நடவடிக்கை எடுக்கப்படும்,'' என்று கரூர் டி.ஆர்.ஓ., முனிரத்தினம் கூறினார். |
|
|
|